Wednesday, July 1, 2009

”கடலை” நினைவுகள்

முன்னாடியே டிஸ்கி:-

டெரரர் பிளான் ரெடியான இடம் இங்க இருக்கு!

*************



கடலையிலிருந்து
சொத்தையை பிரித்து
மத்ததை சேமிக்கும்
சிறுமியாய் சேகரிக்கிறேன்
உனக்கும் எனக்குமான
கடலையை
சரிப்பாதியாக

கடலையை ஒட்டிக்கொண்டு
உதிர மறுக்கும்
வறுக்கின்ற மண்ணாய்
கடலைக்குள் சேர்ந்து
வெளியேற மறுக்கிறது
அந்த வறுபட்ட மண்

கடலையும்
திங்க நல்லதுதான்
தான் கருகி
வந்தால்
கருகிய
சுவையாய்
நாக்கில் ருசிக்கிறது

என் கைப்பிடி அளவு
கடலையோடு,
உன் கையிலுள்ள
கடலையையும்
எனக்கு கொஞ்சம்
தருவாய் நீ என்று எதிர்பார்த்தப்படி

கடலோரம்
அழகாய்
உன் கடலையையும்
என் கடலையையும் சேர்த்து
சுவைத்தப்படியே
வாயினில் மெல்ல மெல்லக்கரைய

நம் ஒவ்வொரு கடலையும்
நெருப்பில் கருகிய
கடலைகளாய்,
ஒரு வினாடி
தீச்சுவாலைக்கு பின்
முழுவதும் கருகிவிட்டது
மொத்தக்கடலையும்!

அலைத்துரத்தும் சிறுமியாய்
என்னைக் கடலைக்கடைக்காரன்
காசுக்கேட்டு துரத்துகிறான்
அவன்
என்னை பிடிப்பதும்
நான்
அவனிடமிருந்து எஸ்ஸாவதும்
நிச்சயமே!

கவனித்து தின்கிறேன்
கருகிய
உன் மற்றும் என் பங்கு கடலைகளை
மூச்சு திணறாமல்
மெதுவாக தண்ணீர் குடித்தப்படியே

ஆயிரம் தடவை
வாங்கி தின்று வந்திருக்கிறேன்
இந்தக் கடலை இப்பொழுது மட்டும்தான்
முதல் முறை நிதானித்து
தின்று பார்க்கிறேன்
என்னோடு சொந்த காசில்
வாங்கி தின்ன
அந்த நாட்களை யோசித்தப்படியே....

1 comment:

  1. படத்தை எங்கே பிடித்தீர்கள்? கடலையும் கவிதையும் எனது ஸ்கீரினில் உண்மையிலேயே இருப்பது போல இருந்தன.

    ReplyDelete