Thursday, February 18, 2010

கோழி ஒன்று வேண்டும்

வையகம் தன்னில்
நான் வாழும் கதை கேட்க
புத்தகம் தன்னில் நான்
புகுந்த கதை சொல்ல....
பிளாகுகள் எழுதி நான்
பேதி கண்ட நிலை காண
கோழி ஒன்று வேண்டும்.....


கொக் கொக் கொக் என
கொக்கரித்திட
உன் கொக்கரிப்பினை
நான் ரசிப்பதை ரசிக்க...
கோழிகள் கோடி நான் மேய்த்ததை
சொல்லிச் சிரித்திட
கோழி ஒன்று வேண்டும்

வான் கோழி சுமக்கா சுவை தனை
நாட்டுக் கோழி சுமந்த கதை கேட்க
துள்ளித்திரிந்த நீ துவண்டு
போனதை பார்த்து
பறவைக் காய்ச்சலின்
துயர்தனை துடைத்து
உன்னை தோளிலிட்டு தாலாட்ட...
கோழியே நீ வேண்டும்!

மடியமர்த்தியுன்னை
மஞ்சள் பூசி சுட்டு
மசாலா அரைத்து
குழம்பு வைக்க
எலும்பும் வெந்து
சுவைதனை ஊட்ட
கோழி ஒன்று வேண்டும்

குவார்ட்டர்அடித்து நான்
ஃப்ளாட்டானதை சொல்ல
சைட் டிஷ் எனக்கொள்ள
சிக்கன் ஒன்று இன்றி
நான் தவிக்கும் கதை கேட்க....

65 கனவுக்கு நான்
ஆசைப்பட்டதை சொல்ல
ஊறுகாயைக் கூட நான்
இழந்த நிலை காண....

அண்டை டேபிள்காரனுக்கு
நான் அரசனாய் இருக்க
வாட்டர் பாக்கெட்டுக்குகூட நான்
வக்கில்லை என உணர்த்த......

இப்'பாரே' என்னை
இகழ்ந்த போது கூட
துணிந்து நின்று நான்
குவார்ட்டரை கடனாய்க் கேட்ட
என் வேதனை சொல்ல
கோழி ஒன்று வேண்டும்!!!!

பசித்தும் உண்ண மறுக்க
சிக்கன் பக்கோடா
எடுத்து ஊட்ட


டிஷென்று சொல்லி
என்னை தேற்ற
வறுவல் எனச் சொல்லி
நான் ஹேப்பியாய் குடித்திட.....
வாகாய் எனக்கு
கோழி ஒன்று வேண்டும்!!!!


ஒரிஜினல் வெர்ஷன் : ஏழு தோசை

Wednesday, July 1, 2009

நீளட்டும் (அல்லது) இன்னும் நிறைய....!

பாய்களின் ஆதிக்க சரசரப்புகளுக்குள்,

பதுங்கியிருந்தத் சத்தம்;

கைகளுக்கிடையில் தொங்கி,

தள்ளாடிக்கொண்டிருந்தது வாளி;

கால் கடுக்க நின்று வாசலில் நிறுத்திக்கொண்டிருந்தார்கள்.

நாசித்துளைக்கும் வாசம்;

அண்டாக்களின் மூடிகள் பெரும் வேகத்தோடு,

எடுத்து வைக்கப்பட்டுக்கொண்டிருந்த அந்த நேரத்தில்,

முடிந்துவிட்டிருந்தது முதல் பந்தி!

அதை நினைத்து பதை பதைத்து நின்றிருந்தேன்!

அவன் கரம் வழி கரண்டி ஏறி,

என் தட்டுக்குள் விழுந்து,

நான் முங்கி தின்ற,

அந்த சிக்கன் பிரியாணி;

இன்னும் கொஞ்சம்

நெறைய போட்டிருக்கலாமென....!




****************************************

மேலும் சில எதிர்வினைகளாற்றிய புரொபஷனல் கூரியர் & வெண்பா வாத்தி எங்கள் அண்ணன் ஜீவ்ஸ் :-)


குடி மகனே....

இருளின் ஆதிக்க சரசரப்புகளுக்குள்
அடங்கியிருந்தது காலம்,
காலுக்கடியில் நகரக்
காத்திருந்தது பூமி,
காலவரையற்று தடுத்து நிறுத்தப்பட்டிருந்தது
நாசித் துளைக்கும் காற்று,
நிசப்தங்கள் சப்தங்களாக
முடிச்சவிழ்ந்த நேரத்தில்,
முடிந்துவிட்டிருந்தது அனைத்தும்..
எனினும் நினைத்தேன்,
என் வாய்வழி உள்நுழைந்து
என்னை மதிமயக்கிக் குலைத்த
அந்த முதல் பிராந்தி மயக்கம்
நீண்டிருக்கலாமென...

***************************


செம அடி சார்


வெளிச்சத்தின் ஆதிக்கச் சரசரப்பு அடங்க
காத்திருந்தது காலம்
காலினடியில் மெதுவாக வேகத்தை
குறைத்துக் கொண்டது பூமி
காலவரையற்று வீசிக்கொண்டு இருக்கிறது
நாசித்துளைக்கும் கூவ நாற்றம்
முடிச்சவிழ்த்த நேரத்தில்
கொட்டிப்போனது எல்லா சில்லரையும்
அவன் பாக்கெட் வழி
என் கரம் புகுந்து பர்ஸ் எடுத்த
அந்த முதல் திருட்டு
அவன் கவனிப்பு வேறு பெண் மேல்
இன்னும் கொஞ்சம் நீண்டிருக்கலாம்

***************************

கொஞ்சம் சீக்கிரமாய்!!


கருந்துகளின் ஆதிக்க சரசரப்புகளுக்குள்
கட்டவிழ்ந்துக் கிடக்கிறது காலம்
காலுக்கடியிலென்றின்றி எங்கெங்கும்
வியாபித்திருக்கிறது அண்டம்
காலவரையரை என்றின்றி எப்போதும்
வீசிக்கொண்டிருக்கிறது இதன் வீச்சம்
நிசப்தங்கள் சப்தங்களாய் மாறி
உயிரவிழ நினைத்த அந்நேரம்

எனினும் நினைத்தேன்
என்னை அப்படி உற்றுப் பார்த்து
உனக்கு ஸ்வைன் ஃப்ளூ இல்லை
என்று சொன்ன டாக்டர்
கொஞ்சம் சீக்கிரமே
சொல்லியிருக்கலாமென.......


பதிவுக்கு பிரியாணி போட்ட பதிவு!

”கடலை” நினைவுகள்

முன்னாடியே டிஸ்கி:-

டெரரர் பிளான் ரெடியான இடம் இங்க இருக்கு!

*************



கடலையிலிருந்து
சொத்தையை பிரித்து
மத்ததை சேமிக்கும்
சிறுமியாய் சேகரிக்கிறேன்
உனக்கும் எனக்குமான
கடலையை
சரிப்பாதியாக

கடலையை ஒட்டிக்கொண்டு
உதிர மறுக்கும்
வறுக்கின்ற மண்ணாய்
கடலைக்குள் சேர்ந்து
வெளியேற மறுக்கிறது
அந்த வறுபட்ட மண்

கடலையும்
திங்க நல்லதுதான்
தான் கருகி
வந்தால்
கருகிய
சுவையாய்
நாக்கில் ருசிக்கிறது

என் கைப்பிடி அளவு
கடலையோடு,
உன் கையிலுள்ள
கடலையையும்
எனக்கு கொஞ்சம்
தருவாய் நீ என்று எதிர்பார்த்தப்படி

கடலோரம்
அழகாய்
உன் கடலையையும்
என் கடலையையும் சேர்த்து
சுவைத்தப்படியே
வாயினில் மெல்ல மெல்லக்கரைய

நம் ஒவ்வொரு கடலையும்
நெருப்பில் கருகிய
கடலைகளாய்,
ஒரு வினாடி
தீச்சுவாலைக்கு பின்
முழுவதும் கருகிவிட்டது
மொத்தக்கடலையும்!

அலைத்துரத்தும் சிறுமியாய்
என்னைக் கடலைக்கடைக்காரன்
காசுக்கேட்டு துரத்துகிறான்
அவன்
என்னை பிடிப்பதும்
நான்
அவனிடமிருந்து எஸ்ஸாவதும்
நிச்சயமே!

கவனித்து தின்கிறேன்
கருகிய
உன் மற்றும் என் பங்கு கடலைகளை
மூச்சு திணறாமல்
மெதுவாக தண்ணீர் குடித்தப்படியே

ஆயிரம் தடவை
வாங்கி தின்று வந்திருக்கிறேன்
இந்தக் கடலை இப்பொழுது மட்டும்தான்
முதல் முறை நிதானித்து
தின்று பார்க்கிறேன்
என்னோடு சொந்த காசில்
வாங்கி தின்ன
அந்த நாட்களை யோசித்தப்படியே....

*எச்சரிக்கை* இப்படியும் நடக்கலாம்..!



எல்லையை மீறி செல்லவேண்டாம்

உடலும்..!

உணவும்..!



(வலி இருக்கறவனுக்குத்தானப்பா தெரியும் அதோட கஷ்டமெல்லாம் நான் சொல்றதை சொல்லிப்புட்டேன் பிறகு உங்க இஷ்டம்! அதையே பாலோ பண்ணுனா பிறகு நொம்ப்ப கஷ்டம்!)

நன்றி :- டைட்டில் தானம் - ஜீவ்ஸ் அண்ணாச்சி!